எமக்கு சில வேளைகளில்
சிறகுகளும்,
சில வேளைகளில்
சிலுவைகளும்,
இன்னும் சில வேளைகளில்
போதி மரங்களும்
தேவைப் படுகிறது.
விடியும் பொழுதுகளில்
கண்களின் கனவுகள்
மதியம் வருவதற்குள்ளே
வாடியும் போகின்றன.
வெவ்வேறு கோணங்களில்
தினம் ஒரு மனிதம்.
விமர்சன வீச்சுக்களால்
வெந்துதான் போகிறது மனசு!
மனசொன்றும் நகமல்லவே?
வேண்டாத பொழுதுகளில்
வெட்டி எறிவதற்கு.
மனசின் பரிமாணங்களை
ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்...
முட்களை வெறுத்தால்
ரோஜாவில் ஏது இரசனை?
பயம், பாசம்,
காதல், காமம் என
ஆட்டுவிக்கிறது மனசு
ஆடுகிறோம் நாமெல்லாம்!
.
.
.
கவிதைகள் பொதுவாக எனக்கு அவ்வளவாக புடிபடாது., நிறை எழுதி இருக்கிறீர்கள்., இன்னும் எழுதுங்கள்., வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றாக எழுதியுள்ளீர்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றி ஷர்புதீன், நன்றி வேலு. வாழ்த்துக்களுக்கு நன்றி
ReplyDelete