26/01/2004
ஈடு வைத்தேன்
இதயத்தை - உன்னிடத்தில்.
வட்டியாகக் கேட்கின்றாய்
என் உயிரை.
தரமுடியாது போகலாம்...
பேசாமல் உன்
சொந்தமாக்கிக் கொள்
என் இதயத்தை!
சொர்க்கத்தின்
வாசலைக் காட்டிவிட்டு,
மரணத்தின் விளிம்புக்குக்
கூட்டிச் சென்று,
நரகத்தின் பிடியில்
தள்ளிவிடத் துடிக்கும்
உன் பார்வைகள்...
என்னைப் பாடாய்ப் படுத்துகின்றது.
உன்னால் பின்னப்பட்ட
காதல் வலையில்
சிக்குண்ட பூச்சியாய் - நான்.
என்னை விழுங்க வரும்
சிலந்தியாய் - நீ.
பார்த்துப் பார்த்துப்
பழகிப் போனவை தான்
உந்தன் பார்வைகள்.
ஆனாலும்
முதலாவதாய் பார்க்கும்
ஒவ்வொரு தடவையும்
என்னை ஊடறுத்து,
இதயத்தை வேரறுப்பதென்னவோ
உண்மை தான்.
பெண்ணே!
உன்னிடம் பெறுவதற்கு
நிறைய உண்டு!
உனக்குக் கொடுக்கவென்று
என்னிடம் -
கண்ணீரால்
கழுவப்பட்ட இரவுகளும்,
கரைந்து போகும்
கனவுகளும் மட்டும்!
உனக்குத்தான் தெரியுமே
நான் -
விளக்கைக் காதலிக்கும்
விட்டில் பூச்சி என்று!
.
.
.
ஈடு வைத்த இதயத்தை..சொந்தமாக்கிக்கொள்!...அருமை!
ReplyDelete