20/01/2004
பெருமைக்குரிய பெண்ணினத்திலே
என்னை
வதைக்கப் பிறந்தவளே!
கற்பனைகளை
ஆக்கிரமித்துக் கொண்டு
காதலைக் கற்றுத் தந்தாய்..
கனவிலே சிரித்து விட்டு
கண்ணெதிரே வெறுக்கின்றாய்..
கவிதைகள் படித்து விட்டு
மௌன மொழி பேசுகின்றாய்..
எண்ணத்தில் குளிர வைத்து
உள்ளத்தை கொதிக்க வைத்தாய்..
நீச்சலைக் கற்றுத் தந்து
கண்ணீரில் மூழ்க வைத்தாய்..
கண்களை விட்டு விட்டு
தூக்கத்தைப் பறித்துச் சென்றாய்..
உதடுகளை விட்டு விட்டு
புன்னகையைப் பிடுங்கிச் சென்றாய்..
தூரிகையைத் தந்து விட்டு
விரல்களை வெட்டிச் சென்றாய்..
வேதனையை தந்து விட்டு
மகிழ்ச்சியை எடுத்துச் சென்றாய்..
உன் நினைப்பைக் கொடுத்து விட்டு
ஏனோ என்னை மறந்து சென்றாய்..
என் உள்ளத்தை ஈரமாக்கிச் சென்றவளே
ஏன் உள்ளத்தைக் கல்லாக்கிக் கொண்டாய்?
.
.
.
Comments
Post a Comment