Skip to main content

காதலும் வாழ்க்கையும்!




10/07/2006




என்னைத் துவைத்து
ஏமாற்றக் கொடியில் 
காயப்போட்டது வாழ்க்கை...
காரணம் காதல்!

தலையணையைத் தான்
அடிக்கடி 
மாற்ற வேண்டியிருக்கிறது...
தினம் இரவுகளில் 
அழுது தொலைப்பதால்...

கேலிப் பேச்சுக்களைத்தான் 
தாங்க முடிவதில்லை...
நிலவினதும்,
காற்றில் ஓடும் சருகினதும்...

வீட்டுச் சுவரின் 
எல்லா ஆணிகளிலும் 
என்னைப் பற்றிய விமர்சனங்கள்.

எதிர் பார்த்த தோல்விகளூடு  
நித்தம் நகர்கின்றேன்...

உன் முகவரி தேடி வரும் 
வசந்தங்கள் 
இப்போதெல்லாம் 
என்னை 
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

தாமரை இலைமேல் 
தண்ணீர் போல் 
வாழ்ந்து முடிக்கச் 
சபிக்கப் பட்டது... 
உன்னால் தான்!

மௌனங்களையே 
அதிகமாகப் பேச 
பழக்கிக் கொடுத்து 
வருகின்றேன்... 
உதடுகளுக்கு.

பண்பைப் படித்து 
பொறுமையை அறிந்திருந்தாலும் 
நாகரீக உடையில் 
நானொரு நடைப் பிணம்தான்...

நான் தான் முயலவில்லையோ 
உன்னிடம் முடிவைக் கேட்க?
முயன்றிருக்கலாம்...
காற்றின் முயற்சிதானே 
கத்தரீனா சூறாவளியும்?

இதற்கு மேல் 
அவகாசம் எதற்கென்றா 
தலையாட்டி பொம்மையாய் 
இன்னொருவனுக்கு தலை சாய்த்தாய்?
.
.
.

Comments

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

தேநீர் வேளை

உனக்கும் எனக்குமிடையிலான தேநீர் வேளைகளை நான் அதிகம் நேசிக்கின்றேன்... காதற்ற தேநீர்க் குவளையை நீ நீட்டும் போது உன் கைவிரல்கள் தொடாமல்தான் வாங்கப் பார்க்கின்றேன். மீறியும் பட்டால் முறைக்காதே. என் தவறு ஏதுமில்லை. இரும்பைக் கவர்வது காந்தத்தின் இயல்புதானே.... நீ தரும் தேநீர் உள் நாக்கில் தித்திக்கும். உன் கூந்தல் வாசம் என் உயிரோடு கலக்கும். நம் இயல்பான பேச்சுக்களின் இடையே உன் கண்கள்  என் கண்களை வேறு உலகத்திற்கு இட்டுச்செல்வதை தடுக்க முடியாமல் தடுமாறி, நொருங்கி உன் தேநீர்க் குவளைக்குள் விழும் என்னை சட்டென எடுத்துக் குடிப்பாய். நீ விரும்பித்தான் குடித்தாயா என்பதை உன் கடைவாயில் ஒட்டியிருக்கும் காதல்தான் சொல்ல வேண்டும்! . .