29/01/2004
காதலின் மன்றத்தில்
நீதிபதியாக -
அவள்.
குற்றவாளியாக -
நான்.
திருட முயன்றது குற்றமாம்.
அவள் இதயத்தை -
திருட முயன்றது குற்றமாம்...
தண்டனையோ!
அவள் பார்வைகளைத்
தீண்டக் கூடாதாம்.
அவள் சிரிப்புக்களைச்
சேகரிக்கக் கூடாதாம்.
அவள் சுவாசங்களைப்
பருகக் கூடாதாம்.
ஐயகோ!
தூக்கைவிடத் துன்பகரமானதுவே!
வேண்டுமென்றால்
அதற்குப் பதிலாக
செத்துவிட்டுப் போகட்டுமா?
.
.
.
Comments
Post a Comment