Skip to main content

இப்போதைக்கு இவளைப் பற்றி...

25/01/2004

பதினெட்டு வயதுப் பருவ மங்கை அவள்!
அழகுக்கெல்லாம் அழகு சேர்க்க 
இப்பரந்த பூமியில் பிறந்த பதுமை...

பக்குவத்தை படித்து 
ஒழுக்கத்தை ஆடையாக உடுப்பவள் ...


பௌர்ணமி நிலவு பகலில் வந்தால் 
பொறாமைப்படும் 
இவள் நிறத்தைக் கண்டு...

இரத்த நாளங்களை வெடிக்கச் செய்து 
உயிரணுக்களை உறுஞ்சும் அட்டைகள் 
அவள் பார்வைகள்...

தென்றல் காற்றில் ஹைக்கூ எழுதும் 
இவள் கார் வண்ணக் கூந்தல்...

காற்றுக்குக் கடிவாளமிட்டு
கைதியாக்கும் சிரிப்பலைகளில்
சிதறிப்போகிறது என் உள்ளம்...

தேவதையின் செவ்விதழில் 
புலம்பெயரத் தவம் கிடக்கிறது 
அவளுக்காய் வளர்ந்த என் தாடியும்,
அதற்கண்மித்துள்ள  பிரதேசங்களும்...

மெல்லச் சிறகடிக்கும் 
வண்ணாத்துப் பூச்சி இமைகளுடன்
கொஞ்சி உறவாடத் துடிக்கிறது 
துளிர் விட்ட என் மீசை...

கார்வட்டப் பொட்டை 
கைது செய்த இடத்தில், 
எப்போது இடங்கிடைக்கும்
என தினந்துடிக்கும் - என் உதடுகள்...

கன்ன ஓரத்தில்,
காதிற்கருகில்...
சுருண்டு விழும் ஒரு சில முடிகளில்
சிக்கித் தவிக்கிறேன் - நான்...

தங்கத் தாமரை மொட்டான 
இவள் மூக்கிலிருந்து 
விடை பெறும் சுவாசங்களை 
தேடித் பிடித்து சேகரிப்பதே 
என் முழு நேர வேலை!

இவளைக் காணும் ஒவ்வொரு கணமும்...
புதிதாய்ப் பிறந்த மழலையாக,
குழைந்து, 
நெழிந்து பின் 
எங்கோ தொலைந்தே போகிறேன்...
.
.



Comments

  1. //தொலைந்தே போகிறேன்...//
    கவிதையுடனே... வாழ்த்துக்கள்
    .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

வரமாய் வந்த தேவதை

ஆண் குரல் :  வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்துப்  பொன்வண்டு நீ இதயத்தை அரிக்கும்  சில் வண்டு! கனவுகள் வரைந்த  ஓவியம் நீ கவிஞர்கள் படைத்த  காவியம்! மொட்டுக்கள் விழித்து மலராகும் உன் கூந்தலின் மென்மையை களவாடும்! ** வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டு நீ இதயத்தில் இனிக்கும்  கற்கண்டு! ** உன் உதட்டினில் பிறப்பது சிறு கவிதை அது உடனே மறைவது பெருங்கவலை! இரவுகள் வருவது  எதற்காக? உன்னால் பௌர்ணமி தோற்கணும் அதற்காக! **   வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டே உன் இதயத்தில் எனக்கொரு இடமுண்டா! ** நதிக்குள் குதித்தது நீர்வீழ்ச்சி அதன் காதல் தோல்விக்கு நான் சாட்சி! உன்னருகால் உலகை அழகாக்க என் ஆயுள் முழுக்க நீ வேண்டும்! **   வரமாய் வந்த  தேவதை நீ கு...