சமீப காலங்களில் - நீ
ஏற்படுத்திய தாக்கங்களை
உன் ஆரம்ப கால
நடப்புக்களில்
நான் அவ்வளவாக
உணரவில்லை...
நட்சத்திரத் துண்டங்களை
தூரிகை முனை ஒன்றால்
தொட முடிந்தால்
இனங்காணப்படாத அழகி
உன்னில் இன்னும்
அழகு சேர்ப்பேன்...
எழுத எழுதத் தீராத
மந்திரப் பேனாவைப் போல
சேர்ந்து வாழும் போது
நம் இளமை தீராதிருக்க
ஒரு வரம்
வாங்கி வைத்திருக்கிறேன்.
சம்மதமா?
இப்போதெல்லாம்,
மழையின் சாரல்
கண்டுவிட்டால்
ஓடிச் சென்று நனைகிறது
உன் ஞாபகங்கள்.
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
நீ கெட்டிக் காரிதான்.
காதலிலும்
அதைத்தானே செய்கிறாய்?
யாரும் கூறாத வார்த்தைகளில்
காதலை
மௌனமாகச் சமர்ப்பிக்கிறேன்.
உன் உள்ளங்கைக்குள்
அதைப் பத்திரமாக
வைத்துக் கொள்வாயா?
.
.
.
Comments
Post a Comment