29/01/2004
ஒவ்வொரு நாளும்
செத்துப் பின்
புதிதாய்ப் பிறப்பதற்கு - காதல்
சிறந்த வழிதான் போல...
ஓ பிரம்மா!
உன்னைத் திட்ட மாட்டேன்.
நீ வரைந்த ஓவியம்
உயிர் பெற்று,
தேவதையாய்
என் கண்முன்னே...
உனக்காக
வருத்தப்பட்டுக் கொள்கிறேன்.
அழகிய அந்த ஓவியத்தை
என்னிடமா தொலைப்பாய்?
எதைப் பிடித்ததென்று சொல்ல?
அவளிடம்
எல்லாமே பிடித்திருக்கிறதே!
மௌனத்தை மாலையாக
அணிந்து வந்து - என்னை
அவளிடம் மண்டியிடச் செய்வாளே...
அவள் பார்வைகளில்
ஏதோ ஒன்றை - என்
கண்கள் தேடியும்
கிடைக்காத போது
கேலியாகச் சிரிப்பாளே...
முத்தாய் இருக்கும்
அவள் பற்களை,
மூடி மறைக்கும்
அவள் இதழ்களை -
எப்போது
எனக்காய் திறப்பாள் என
ஏங்க வைப்பாளே!
கனவிலே தினம் வந்து
காதலைச் சொல்லிவிட்டு,
நேரிலே என்னை
அற்பமாய்ப் பார்ப்பாளே!
எதைப் பிடித்ததென்று சொல்ல?
அவளிடம்
எல்லாமே பிடித்திருக்கிறதே!
காதல் இவளுக்கு...
ஒதிக்கி வைக்கப்பட்ட
ஒவ்வாமைப் பொருளாம்...
எனக்கோ அதுவே சுவாசம்!
உனக்காக பெண்ணே!
மழையில் குடையாக,
என்றும் நட்பாக,
பாசத்தில் தாயாக,
நல்ல துணையாக
நானிருப்பேன் கண்ணே!
முடியாது என்ற ஒரு சொல்லால்
என் மனதை ஒடித்து,
வாழ்வை முடிக்கப் போகிறாயா?
ஆம் என்ற உன் வார்த்தைக்காய்
காலம் உள்ள வரைக்கும்,
நானும் வாழும் வரைக்கும்,
நிச்சயமாய் காத்திருப்பேன்...
நிர்வாணமாக்கப்பட்ட
உன் நினைவுகளோடு!
.
.
.
Comments
Post a Comment