13/02/2004
நான் தொட்டுப்பார்த்த
தென்றல் காற்றை
நீ சுவாசித்த போது...
வெடித்துச் சிதறிய என்
வேதனைகள் தெரியவில்லையா?
தாக்கங்கள் நிறைந்த என்
ஏக்கங்களை உணரவில்லையா?
உன் மேல் நான் கொண்ட
உண்மைக்காதலும் புரியவில்லையா?
மென்மையானவளே!
உனக்கு இதயம் மட்டும்
எப்படி இரும்பானது?
கண் முன்னே கண்டவுடன்
வெறுக்கின்றாயே...
நான் என்ன
வேற்றுக்கிரகவாசியா?
இப்போது
என்னை
ஏறெடுத்தும் பார்க்காதவளே...
எப்போது
என் கவிதைகளை
ஏற்றுக் கொள்ளப் போகிறாய்?
உனக்காக எல்லாமே
காத்திருக்கின்றன...
கடல் துப்பிய முதல் அலை,
பாலில் ஊறவைத்த பௌர்ணமி,
சுட்டு விளையாடும் சூரியன்,
வர்ணம் பூசப்பட்ட வானவில்,
மேகங்கள் வடித்த கண்ணீர் துளிகள்,
உன்னுடன் குளித்த பன்னீர் துளிகள்...
எல்லாமே
உன்னை நினைத்து
உனக்காகவே காத்திருக்கின்றன...
எனக்காக...
நீ ஒருத்தி மட்டும் தானே?
உனக்கும் தெரியாது!
சொந்தங்கள் நிறைந்த
அநாதை நான் என்று...
.
.
.
//கடல் துப்பிய முதல் அலை//
ReplyDeleteஅழகான வரி.