நிசப்தப் பொழுதுகளிலும்
அதிர்ச்சியை உண்டாக்கக் கூடிய
பார்வைகள் பொருந்தியவள் நீ!
உன் பார்வைகளால் தான்
முதன் முதலில்
பௌர்ணமியை மறந்தேன்...
உன் பழகும்
விதங்களின் முன்னால்
அழகு தோற்றுப் போக
நான் உன்னைத் தெரிந்தேன்...
தீ
எத்தனை நிஜமோ,
தென்றல்
எத்தனை நிஜமோ,
அத்தனை நிஜமானதடி
காதலும்!
உன் உதட்டின்
அசைவுக்குள் தான்
அடைந்து கிடக்கின்றது
என் வாழ்க்கை.
நீ என்னை
ஏற்பது பற்றியோ
அல்லது
மறுப்பது பற்றியோ
எனக்குக் கவலையில்லை!
என்னில் கொஞ்சம்
மீதி வைக்கிறேன்...
நினைவுகளைப் போலவே
உன் பங்கிற்கு
நீயும்
என்னைத் தின்று தீர்.!
.
.
.
Comments
Post a Comment