07/02/2004
காதல் வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்டு
கண்விழித்தேன்
உன் காலடித்தடங்களில்...
அன்று முதல்
தொலைக்காத ஒன்றை ஏனோ
தேடச் சொன்னாய்...
உன்
பேச மறுக்கும் கண்களையும்,
பார்க்க மறுக்கும் உதடுகளையும்,
அம்பு பாச்சும் புருவங்களையும்...
கவிதையில் பாட
என் கற்பனைக்கு வயதில்லையே!
உன் சுட்டெரிக்கும் அழகில்
கண்ணிழந்து ஊமையான நான்
என் பேனாக்களுடன் உறவாடி
கவிதைக் குழந்தைகளை
பெற்றெடுக்கிறேன் தினமும்...
உன்னைக் கண்டு செல்லும்
ஒவ்வொரு பொழுதுகளிலும்
என் உயிரின் கரையில்
கொஞ்சம் உருகுவதை அறிகிறாய்.
இருந்தும்
நெருப்பில் குளிக்கிறேன்...
தண்ணீரால் எரிக்கப் படுகிறேன்...
காதலைப் படைத்தவன்...
உன்னைப் படைத்தது
அவனுக்கான திறமை.
என்னைப் படைத்தது
எனக்கான துரோகம்!
உன்னை ஸ்பரிசிக்கும்
ஆடையாக வேண்டாம்...
உன்னை தாங்கும்
செருப்பாய் இருக்கிறேன்... சம்மதமா?
மௌனத்தை
வரமாய்ப் பெற்றவளே!
ஏன் இதயத்தைக் கல்லாக
கேட்டு வாங்கிக்கொண்டாய்?
.
.
.
Comments
Post a Comment