Skip to main content

கசந்து பின்...

24/04/2004
என் வாழ்க்கை வசந்தத்தில் 
முட்களாய் பூத்தவளே!
உன் புன்னகைக்குள் ஏனடி 
பூகம்பத்தை
ஒளித்து வைத்தாய்?

நெற்றியின் மீது 
நினைவுகளால் சுட்டுச் செல்பவளே!
மரணத்தை ஏனடி 
மகுடமாய் அணியச் சொல்கிறாய்?

தினம் ஒரு மரணம்,
தினம் ஒரு ஜனனமாய்...
பலப்பல விதங்களில் என்னை 
பகிடிவதை பண்ணாதே!

உன்னாலே சிதறிப்போன 
உள்ளத்தை 
எங்கே போய் சேகரிக்க?

அப்படி என்ன
கேட்டு விட்டேன்?

என் சுவாசங்களை 
தவற விட்டதால்
உன் மூச்சுக் காற்றில் கொஞ்சம் 
முகரத்தானே கேட்டேன்?

என் கனாக்களில் உன்னைக் கண்டு 
உன் கனவுகளில் எல்லாம் 
என்னைத் தானே கேட்டேன்?

என் இதயத்தை உனக்குத்தந்து 
உன் இதயத்தில் 
இடம் ஒன்றைத்தானே கேட்டேன்?

அப்படி என்ன 
கேட்டு விட்டேன்?

பார்க்க மறுக்கிறாய்.
பழக மறுக்கிறாய்.
சேர்க்க மறுக்கிறாய்.
சிரிக்க மறுக்கிறாய்...

இது என்ன- 
தவணை முறையில் தண்டனையா?
அல்லது 
பார்த்ததற்கான பரிசுகளா?

கனிந்த பின் ருசிப்பது 
கனி ஒன்று தான்..
கசந்து பின் இனிப்பது 
காதல் மட்டும் தான்...
கனிய மாட்டாயா?

இரவுகளில்
இம்சை செய்பவளே!
கனவுகள் உனக்குச் சம்மதம்...
காதல் ஏன் சம்மதமில்லை?
என்னைப் பிடித்திருக்கிறது...
காதலை ஏன் பிடிக்கவில்லை?
.
.
.


Comments

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

தாழ்வு மனப்பான்மை!

> >> > உளவியல் கணிப்புப்படி தாழ்வு மனப்பான்மையின்  தாய் - உடலமைப்பு! தந்தையோ - நிறக்குறைவு! தாழ்வு மனப்பான்மையை  விட்டொழி, வெற்றி பெறுவாய் என்று போதிப்பது  சுய முன்னேற்றப் புத்தகங்களின்  விற்பனைத் தந்திரம்! கல்லா கட்டியதும் தங்கள் கடையை மூடி விடுவார்கள்! பாதிக்கப்பட்டவனோ  பாதியிலே விடப்படுவான்! உண்மையில் உடல் அமைப்பும் நிறக் குறைவும் ஒருபோதும் நோயாகாது! தோற்றத்தைப் பார்த்து  எடைபோடுபவர்களை வேண்டுமானால் மன நோயாளிகளாக வைத்துக் கொள்ளலாம். அவர்கள் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்லலாம். என்னைப் பொறுத்தவரை, தாழ்வு மனப்பான்மை என்பது கேடயம்! பந்தாக் காரர்களும், பணக்காரர்களும்  பவிசுக் காரர்களும், பதவிக்காரர்களும்  குணமற்றவர்களும்,  நல்ல மனமற்றவர்களும்  வடிகட்டப்பட்டு, நல்லவர்கள் மட்டுமே நட்பாய் கிடைக்கும்! நல்ல நட்பு என்பது  மிகப் பெரும் வரம்! தலைக்கனத்தோடு இருப்பதைவிட, தாழ்வு மனப்பான்மையுடன்  இருப்பதொன்றும் குற்றமெல்ல! காரணம் -...