Skip to main content

வழமை போல கொல்!

07/02/2004
உப்புக் கரித்த உணர்வுகளில் 
தேன் சுவையாய் வந்த பெண்ணே!
உன் நினைவுகளால் 
இங்கே எனக்குத் தும்மல்கள்..
அங்கே உனக்கு?

எனக்காக நீயல்ல
உனக்காகவே நான்...
பிறந்து, வளர்ந்து, பரிதவிக்கின்றேன்!

நிர்வாணமாய்த் திரியும் 
அந்தி நிலவு-
அதனிடம் தான்...
வலிகள் நிரம்பிய - 
என் வாலிப இரவுகளை 
சேமித்து வைத்திருக்கிறேன்...

உணரப்பட்டு உணரப்பட்டு 
பழக்கப்பட்டவை தான் - உன் 
தட்டிக்கழிப்புக்கள்,
கணக்கெடாமைகள்
இன்னும் இன்னும்...

உன்னைப் பார்க்கும் 
ஒவ்வொரு தடவையும்... 
என்னைக் கண்டுகொள்வாயா?
கண்ணசைப்பாயா  - என 
என்னை நானே கேட்டுக் கொள்வேன்.
எஞ்சுவதென்னவோ 
உன் பரிகாசங்கள்,
எனக்கே உரிய ஏமாற்றங்கள்..

உன்னாலே 
பட்டினியாய்க் கிடக்கும் 
என் உள்ளத்திற்கு 
பசிக்கிறது பெண்ணே!
பருகுவதற்கு - 
உன் பார்வைகள் வேண்டும்..
புசிப்பதற்கு - 
உன் புன்னகை வேண்டும்...
தருவாயா?

நலமாகத் தூங்கி 
நாட்கள் பல பெண்ணே!
உன் நாணங்களை என் கண்கள் 
பரிசாகக் கேட்கின்றன...
உன் பட்டு மனதில் 
இடம் தரா விட்டாலும் 
பரவாயில்லை...
உன் பாதச் சுவடுகளிலாவது
படுத்துக் கொள்ள இடம் ஒன்று தா?
கொஞ்ச நேரம் தூங்குகிறேன்...
வேண்டிய பொழுது   
தட்டி எழுப்பி  
வழமை போல கொல்!
.
.
.


Comments

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

வரமாய் வந்த தேவதை

ஆண் குரல் :  வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்துப்  பொன்வண்டு நீ இதயத்தை அரிக்கும்  சில் வண்டு! கனவுகள் வரைந்த  ஓவியம் நீ கவிஞர்கள் படைத்த  காவியம்! மொட்டுக்கள் விழித்து மலராகும் உன் கூந்தலின் மென்மையை களவாடும்! ** வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டு நீ இதயத்தில் இனிக்கும்  கற்கண்டு! ** உன் உதட்டினில் பிறப்பது சிறு கவிதை அது உடனே மறைவது பெருங்கவலை! இரவுகள் வருவது  எதற்காக? உன்னால் பௌர்ணமி தோற்கணும் அதற்காக! **   வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டே உன் இதயத்தில் எனக்கொரு இடமுண்டா! ** நதிக்குள் குதித்தது நீர்வீழ்ச்சி அதன் காதல் தோல்விக்கு நான் சாட்சி! உன்னருகால் உலகை அழகாக்க என் ஆயுள் முழுக்க நீ வேண்டும்! **   வரமாய் வந்த  தேவதை நீ கு...