19/03/2005
நிற்காமல் செல்லும்புகை வண்டியில்
தெரியாமலே தொலைத்த
பேனாவைப்போல
காதல் இருந்துவிட்டால்...
அது பரிதாபம்.
பின்னிரவுகளிலும்
என்னை
நிராகரிக்கத் தொடங்கியிருக்கிறது
நிலவு...
கைக் குட்டை
அளவுதானே
உனக்குக் காதலும்...
கசக்கிப் போடத்தான்
மனசு கனக்குது -
உன்னையும்,
உன் நினைவுகளையும்!
இருபது வயதிலேயே
நீ இன்னொருவன்
சொந்தமானாய்...
இப்போதும் -
நாம் சென்ற பாதைகளில்
உண்டு,
உடுத்து,
உறங்கி...
ஏதோ
உயிரோடுதான் இருக்கிறேன்...
உன்னைப் போலத்தான்
என்னை ஏற்கவே
மறுக்கிறான்
எமனும்!
.
.
.
Comments
Post a Comment