16/08/2007
இரண்டு நாட்களுக்கு
உன்னைப் பற்றி
எழுதாவிட்டாலும்
என்னவோ போலிருக்கு...
என் முதற்கவிதைக்கு
மட்டுமல்ல
என் முனகல்களுக்கும்
நீ தான் சொந்தக்காரி...
வெடிபலவன் செடியில்
உனக்கு
இஷ்டம் போல...
என்னை
வேடிக்கை மட்டும்
பார்க்கின்றாயே?
நாசமாய்ப் போகட்டும்
தெஸ்தெஸ்திரோன்.
காதலின்
அவஸ்தைகளைத்தான்
தாங்க முடியவில்லை...
நீ
திடமாகவே மறுத்தாய்
அதற்காகவே வெறுத்தாய்...
தவணை முறையில்
தாடி வளர்க்கும் நான்
சில காலங்களுக்கேனும்
உன்னை
மறக்கப் போவதில்லை!..
வேறு என்ன செய்ய முடியும்?
ஒருதலைக் காதலில்
சராசரிக்கும் குறைவான
ஒரு காதலனால்?
.
.
.
Comments
Post a Comment