20/08/2007
ஒரு வேதியியற்பொருளை
உள்ளங்கையில்
வைத்தாற்போல்
அவ்வளவு குளிர்ச்சியானது
உனது முகம்...
மாசற்ற வெண்மைக்கு
சட்டென
உன்னைத் தெரிவேன்...
உன் கவர்ச்சிப் பிரகாசத்தில்
கொஞ்சத்தை தரச்சொல்லி
தோழிகள் கேட்கக் கூடும்...
கொடுத்து விடாதே!
எப்போதும் நினை!
ஹிட்லரைப் போல
கொடுமையானதோ
அன்றி
கணிதத்தைப் போல
சிக்கலானதோ
அல்ல காதல்.
காதல் உண்மையானது.
உலகத்தின் கோட்பாடே
உண்மைகளைச் சோதிப்பதுதானே?
இனிமேலும்,
ஆற்றங்கரையின்
இளங்குளிரில்,
தனிமைத் திரியில்
காமச் சுடர் - மெல்ல
துளிர் விடும்
சமயங்களில்...
காதலைக் கடியாதே!
.
.
.
Comments
Post a Comment